மறைந்த எம்.பி.க்கள், முன்னாள் எம்.பிக்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நாடாளுமன்றம் இன்று கூடியது. பல்வேறு எதிர்பார்ப்புக்கு இடையில் கூடிய நிலையில், மறைந்த எம்.பி.க்கள், முன்னாள் எம்.பிக்களுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்களவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.