Kantara Chapter 1: கர்நாடகாவில் மாணி அணைப் பகுதியில் நடைபெற்று வந்த காந்தாரா படப்பிடிப்பின்போது படகு கவிழ்ந்து விபத்து. ரிஷப் ஷெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நீரில் நீந்தியபடி கரைக்குத் திரும்பி உயிர் பிழைத்தனர்.

ஏற்கனவே படத்தில் நடித்த 3 நடிகர்கள், கடந்த ஒன்றரை மாத இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்ததால், இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அணைப் பகுதியில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறவில்லை என தெரிய வந்துள்ளது. படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.



