Deviramman Hill:  சிக்கமகளூர் தேவிரம்மன் மலையில் தீபத் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் உச்சிமலை மீது சென்று அம்மனை தரிசித்தனர்

Deviramman Hill: Thousands of devotees visited the top of the hill to have darshana
Image credit to News Next Tamil

Deviramman Hill: சிக்கமகளூர் மாவட்டம் மல்லேனஹள்ளி அருகே உள்ள பிண்டுகா என்னும் கிராமத்தில் உள்ளது தேவிரம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீபாவளியின் பொழுது தீபத் திருவிழா கொண்டாடப்படும் இந்த ஆண்டு இதற்கான ஏற்பாடுகள் செய்த நிலையில் நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் முதல் நாளான இன்று தீபாவளிக்கு முதல் நாள் கோவிலின் பின்பகுதியில் இருக்கும் தேவிரம்மன் மலைக்கு மலை உச்சியில் இருக்கும் அம்மனை தரிசிப்பதற்கு   செல்லுவார்கள்

இந்த ஆண்டு மலைக்கு இரண்டு நாட்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதலே பக்தர்கள் மலை மீது ஏறினார்கள் விடிய விடிய மலை கொட்டி தீர்த்தாலும் பல இடங்களில் சகதியுமாக வழுக்க ஆரம்பித்தது இருப்பினும் அங்கு மலைப்பகுதியில்  செல்வதற்கு போலீஸ் உதவியுடன் சில இடங்களில் கயிறு கட்டி மேலே பக்தர்கள் ஏறிச் சென்று தரிசனம் செய்தனர்

Deviramman Hill: Thousands of devotees visited the top of the hill to have darshana
Image credit to original source

பக்தர்கள் கொண்டு சென்ற விறகுகளை மற்றும் எண்ணெய் நெய் பூக்கள் தானியங்களை இன்று இரவு மலை உச்சிமீது இருக்கும் தீப திடலில் தீபம் ஏற்றுவார்கள் இன்று இரவும் நாளை இரவும் இரண்டு நாட்கள் தீபம் ஏற்றுவதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பலரும் பக்தி பரவசத்துடன் வழிபடுவார்கள் நிரந்தரமாக மழை பெய்ததால் அங்கு மழைப்பகுதியில் மிகவும் சிரமத்திற்கு ஆளானவர்கள் இருப்பினும் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர்

நாளையும் அதே போல 40 முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர் இதை கண்காணிப்பதற்கு போலீசார் ட்ரோன் கேமரா மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்த இடங்களில் சேரும் சகதியும் ஆக இருந்ததால் அதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது நகரிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு அதற்கான ஒதுக்கப்பட்ட பேருந்துகளில் செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்

நான்கு நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் செவ்வாய்க்கிழமை அன்று அம்மனுக்கு உடுகே என்னும் பூஜை நடந்து கதவு தானாகத் திறக்கும் அதிசய நிகழ்ச்சியும்  புதன் கிழமை அன்று பல்லாக்கு ஊர்வலமும் வியாழக்கிழமை அன்று அம்மன் கோவில் முன்பாக இருக்கும் திடலில் தீமிதி திருவிழாவும் நடக்க