Chikkamagaluru: சிக்கமகளூரில் நேற்று ஈத்மிலாத் ஊர்வலம் இதற்கென நகர் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன உப்பள்ளி பகுதியில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர் அதற்கு ஹிந்து விநாயகர் குழு அமைப்பினர் அங்கு வந்து இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களை கொடுத்து ஒற்றுமையாக அனைவரும் ஒன்று சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டனர்

அதேபோல சிக்கமகளூர் மாவட்டம் கடூர் தாலுகா பஞ்சேனஹள்ளியில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஒன்று சேர்ந்து விநாயகர் வைத்து வழிபடுகின்றனர் இது மாவட்டம் மட்டுமல்லாது மாநில அளவில் ஒரு பெருமைக்குரிய விஷயமாக திகழ்கிறது அனைவரும் ஒன்று சேர்ந்து பூஜை செய்து வழி பட்டு பின்னர் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டு சென்று குளத்தில் விடுகின்றனர்



