Chikkamagaluru: சிக்கமகளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளம் ஆகிய பாபாபுடண்கிரி முல்லையன்கிரி பகுதிகளுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன ஒன்னாம் தேதி முதல் காலை 6 மணி முதல் 12 மணி வரை 600 வாகனங்களும் மாலை 12 மணி முதல் 600 வாகனங்கள் மட்டும் இ பாஸ் முறைப்படி முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூடுதலாக வாகனங்கள் வந்தால் அதை தடுத்து நிறுத்துவதாகவும் மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார் அந்தப் பகுதியில் இயற்கை சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு கருதி அதிக வாகனங்களை தடை செய்துள்ளனர்
முல்லையன்கிரி பிரிவு அருகே பாபாபுடன் கிரி செல்லும் இடைப்பட்ட பகுதியில் முதலில் நேற்று மாலை 5 மணிக்கு சிறியதாக மண் சரிவு ஏற்பட்டிருந்தது பின்னர் இரவு 8 மணி அளவில் அதே பகுதியில் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டு மரம் ஒன்றும் வேறுடன் சாய்ந்தது இதனால் உடனடியாக கிராமப்புற போலீசார் அங்கு தடுப்புக் கம்பி போட்டு வாகனங்களை தடுத்து நிறுத்தி உள்ளனர் இன்று செல்லும் வாகனங்கள் அனைத்தும் தடை

செய்யப்பட்டுள்ளது மண் சரிவு எச்சரிக்கையால் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அதேபோல மாவட்ட கலெக்டர் மீனாநாகராஜ் இதுகுறித்து அவர் கூறுகையில் இபாஸ் எடுத்து வந்தால் மட்டுமே முள்ளயன்கிரி பாபாபுடன் கிரிக்கு அனுமதிக்கப்படும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த கிராமத்தினருக்கு காபி தோட்டத்திற்கு செல்பவர்களுக்கு இந்த தடை கிடையாது ஆகையால் அவர்கள் நிரந்தரமாக சென்று வரலாம் எனவும் வெளியூர்க்காரர்கள் மட்டுமே இபாஸ் முறைப்படி செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தனர்



