உர உற்பத்தியில் 2023-க்குள் இந்தியா தன்னிறைவு அடையும் என மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், இறக்குமதியில் அண்டை நாடுகளை சார்ந்து இருப்பதை குறைப்பதற்காக தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 40 ஆயிரம் கோடியில் புதிய உர உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டு கொண்டிருப்பதால், 2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்.
மேலும் “நாட்டில் உள்ள நான்கு உர நிறுவனங்களுக்கு சமீபத்தில் புத்தாக்கம் அளித்துள்ளோம். 2023-க்குள் உரங்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.