வெள்ளப்பெருக்கு காரணமாக மருத்துவமனைக்குசெல்ல முடியாமல் பெண் சாவு

சிக்மங்களூர் மாவட்டம் மூடிகெரே தாலுகா அருகே உள்ள மலை பிரதேச கிராமத்தில் ஐந்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த ஐந்து குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஹொலே குடடி இருந்து மலே குடி கே வரவேண்டுமானால் அதற்கு மூன்று காபி தோட்டங்களையும் பதரா ஆற்றையும் பரிசலில் கடக்க வேண்டும் கடந்த சில தினங்களாகவே பத்ரா ஆரற்றில் அதிகப்படியாக மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த ஒரு வார காலமாக உடல்நலக்குறைவால் வீட்டிலேயே இருந்து நாட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்த சசிகலா 40 வயது ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல முடியாமல் உடல்நிலை குறைவால் வீட்டிலேயே இறந்து விட்டார்.

இதேபோன்று அதே குடும்பத்தைச் சேர்ந்த ருத்ரய்யா 70 வயது என்கின்ற இவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனைக்கு கூட்டடி கொண்டு வெளியில் அழைத்துச் செல்ல முடியாமல் சிகிச்சை அளிக்க முடியாமல் இறந்துள்ளார்.

இதற்கு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த கிராமத்திற்கு செல்வதற்கு பாலம் கட்டி கொடுக்க வேண்டுமெனவும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.