தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5516 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5516 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரைபாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 5206 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதனால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 86 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது.சென்னையை பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 996 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் என்று கூறினார் பாதிப்பு 60 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்தம் 8211 பேர் உயிரிழந்தனர்.