Ronaldo Signs With Saudi Arabian Club: ரூ.4,400 கோடிக்கு ரொனால்டோவை ஒப்பந்தம் செய்த சவுதி கிளப் அணி

சவுதி: போர்ச்சுக்கலின் கால்பந்து வீரர் (Ronaldo Signs With Saudi Arabian Club) கிறிஸ்டியானோ ரொனால்டோவை ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ள சம்பவம் கால்பந்தாட்ட வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நசீர் கிளப் அணி 2025 ஜூன் வரை ரொனால்டோவை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்ச்சுகல் கால்பந்தாட்ட அணியின் கேப்டனாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இருந்தார். இவர் கிளப் அரங்கத்தில் கடைசியாக மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக பங்கேற்றார். உலக கோப்பை தொடருக்கு முன்னரே இதில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து புதிய அணியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக இரண்டரை ஆண்டு ஒப்பந்தத்தில் ரொனால்டோ விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், சவுதியின் கிளப் அணியான அல் நஸர் அணியின் ஒப்பந்தத்தில் ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளார் என்று சவுதி அரேபியாவின் அறிக்கைகள் கூறியுள்ளது. அதாவது அடுத்து 2030ம் ஆண்டில் உலக கோப்பை கால்பந்து தொடரை சொந்த மண்ணில் நடத்துவதற்கு சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னரே உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் ரொனால்டோவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.