கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் !

யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

யாஸ் புயல் வரும் 26ம் தேதி கிழக்கு கடற்கரையில் ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.