குழந்தைகளுக்கான தடுப்பூசி விரைவில் பரிசோதனை தொடக்கம் !

கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தை சேர்ந்த பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடலின் போது டாக்டர் ரேச்ஸ் எலா கூறியதாவது,

கடந்த ஆண்டு கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை மேம்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்தினோம், இப்போது எங்கள் உற்பத்தி திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

பாரத் பயோடெக்கின் குழந்தைகள் தடுப்பூசி சோதனைகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உரிமத்தைப் பெறக்கூடும்.