இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி !

கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஜூன் வரை போட்டி தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக 2021 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் 2023-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் அதிகமான போட்டிகளில் விளையாட இருப்பதாலும், போட்டி அட்டவணையை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாலும் 2023ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.