எழுத்தாளர் மனோஜ்தாஸ் காலமானார் !

மனோஜ் தாஸ் ஒரியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளரான இவர், நூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். “மிஸ்ட்ரி ஆஃப் மிஸ்ஸிங் கேப் அண்டு அதர்ஸ் ஸ்டோரிஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக, சாகித்திய அகாடமி விருது பெற்றார்.

மேலும் இவர் பத்மஸ்ரீ,பத்மபூஷண் ஆகிய விருதுகளை வாங்கியுள்ளார்.சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த மனோஜ் தாஸ், புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் வயதுமூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவர் நேற்றிரவு இரவு 8.30 மணியளவில் காலமானார்.