தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கரோனா பாதிப்பு !

கரோனா தொற்று இரண்டாம் அலை இந்தியாவை தாக்கி வருகிறது.நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை நெஞ்சை பதறவைக்கிறது.மத்திய மற்றும் மாநில அரசும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இது பற்றி தனது சமூக வலைதளப் பக்கங்களில் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.