மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு – கோவா !

கரோனா தொற்று இந்தியாவில் அதிகரித்து வருவதால் அணைத்து மாநிலங்களும் ஊரடங்கை அறிவித்து வருகிறது.மகாராஷ்டிரா,கர்நாடகா,கோவா ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

தற்போது கோவா மாநிலத்தில் நாளை முதல் மே 3 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். நாளை இரவு 7 மணி முதல் மே 3 ஆம் தேதி காலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.