அன்டார்டிக்காவில் உள்ள உலகின் பெரிய பனிப்பாறை உடைந்தது !

அன்டார்டிக்கா கண்டம் என்பது முழுவதும் பனிகளால் சூழப்பட்டது.அங்கு உலகின் மிக பெரிய பனிப்பாறைகள் உள்ளன.புவி வெப்பமயமாதலை இந்தப்பனிப்பாறைகளே சமன் செய்து வருகின்றன.

தற்போது தொழிற்சாலைகள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறையால் கடந்த சில வருடங்களாக அன்டார்டிக்காவில் உள்ளபனிப்பாறைகள் உடைந்து வருகின்றன.

இது பூமிக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது.இந்நிலையில், அன்டார்டிக்காவில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறையானது நேற்று உடைந்தது. வேடேல் கடலில் அமைந்திருந்த இந்தப் பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது.

புவி வெப்பமயமாதலே இந்தப் பனிப்பாறை உடைந்ததற்கு முக்கிய காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.