யாஷிகா தோழி ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார்

மாமல்லபுரம் ஈசிஆர் சாலையில் நடந்தது என்ன என்பது குறித்தும் இறந்த பெண் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடினார் என்றும் அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த 24 ஆம் தேதி இரவு தனது நண்பர்களுடன் மாமல்லபுரத்தில் உள்ள இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது சூலேறிக்காடு அருகே அவர்கள் அதிவேகமாக வந்ததால் அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது யாஷிகாவின் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவுக்கும் அவரது இரு ஆண் நண்பர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் கடந்த வாரம்தான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்ததும், ஹைதராபாத்தை சேர்ந்த இவர் யாஷிகாவின் நண்பர் என்பதாலும் அவர் சென்னையில் இருப்பதாலும் அவரை பார்க்க வந்த போதுதான் விபத்தில் சிக்கி இறந்துள்ளார் என தெரிகிறது.

சுமார் 1 மணி நேரமாக அந்த பெண் உயிருக்கு போராடி வந்தார். அவருடன் வந்தவர்கள் யாராவது மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அந்த பெண் இறந்திருக்க மாட்டார். ஆனால் அவர்களது நோக்கம் அந்த இடத்தை விட்டு தப்பிப்பதாகவே இருந்தனர்.