ஹாத்ரஸ் விவகாரத்தில் ஏன் அமித் ஷா மவுனமாக இருந்தார்?- மம்தா

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டரின் தாய் உயிரிழந்ததற்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பற்றிப் பேசும் அமித் ஷா, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாத்ரஸில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது ஏன் மவுனமாக இருந்தார் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விஷயத்தை பாஜக அரசியலாக்குகிறது. மஜும்தார் இறந்தது குறித்து அமித் ஷா இரங்கல் தெரிவித்து கருத்துத் தெரிவிக்கிறார். ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் எரிக்கப்பட்டபோது அமித் ஷா ஏன் மவுனமாக இருந்தார்?

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது, கடந்த சில நாட்களாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பல இடங்களில் கொல்லப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.