சசிகலாவின் ஆன்மீக அரசியல்..!

சசிகலா கடந்த சில நாட்களாக நீண்ட ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உறவினர்களின் வீடுகளுக்கு சென்ற அவர், அதன்பிறகு கோயில் கோயிலாக செல்ல ஆரம்பித்தார்.

நாகை நாகநாதசுவாமி கோயிலில் ராகு, கேது சன்னதிகளில் சிறப்பு பரிகார பூஜைகளை செய்தார். அடுத்து, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கிறஸ்தவ ஆலயம் என்று மும்மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்றார்.

இதைத் தொடர்ந்து நேற்று(மார்ச்28) ராமேஸ்வரத்திற்கு வந்த சசிகலா, இரவு 7 மணியளவில் திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலுக்கு வந்தார். அங்கு தரிசனத்தை முடித்து விட்டு மீண்டும் ராமேஸ்வரத்திற்கு சென்று தங்கினார்.

இன்று காலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்றார். மேலும் சிறப்பு பூஜைகளை செய்து விட்டு தஞ்சாவூருக்கு திரும்பினார்..