கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கிய உலக சுகாதார அமைப்பு !

உலகையே ஆட்டிப்படைத்துவரும் வரும் இந்த கொரோனாவுக்கு அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம், மற்றும் ஜெர்மனியின் பயோஎன்டெக் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோஎன்டெக் தயாரித்த கரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.

உலக சுகாதார அமைப்பு விதித்த பாதுகாப்பு, செயல்திறன் அளவுகோல்களை அந்தத் தடுப்பூசி பூர்த்திசெய்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ஏழை நாடுகளுக்கு இந்தத் தடுப்பூசி விரைவில் கிடைக்கப்படவுள்ளது.