மெழுகு போல் சருமம் பளபளக்க ஆயில் மசாஜ் செய்யுங்கள் !

இயற்கையாகவே எண்ணெய் பசை உள்ள சருமம் பார்க்க அழகாக மற்றும் ஒரு வித மினுமினுப்போடு இருக்கும்.எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தோல் வறண்டு போகாது.

வறண்ட சருமத்தில் எண்ணெய் பசை குறைவாக இருப்பதால் தோல் மேல் வெடிப்பு வந்து இளமையிலே முதுமை போல் தோன்றும்.பொதுவாக எந்த வித சருமாக இருந்தாலும் ஆயில் மசாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் மேம்பட்டு பார்க்க ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக நம் தேங்காய் எண்ணெய் ,விளக்கெண்ணெய் ,ஆலிவ் எண்ணெய்,பாதாம் எண்ணெய் கொண்டு வீட்டிலே மசாஜ் செய்து கொள்ளலாம்.தேங்காய் எண்ணையில் சருமத்தை மிருதுவாக்கும் மற்றும் சுருக்கங்களை போக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் அதிகம் இருக்கிறது.

பாதாம் எண்ணெய் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர்.இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.பாதிக்கப்பட்ட தோலை சரி செய்யவும் உதவுகிறது.விளக்கெண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்வதால் முகம் குளிர்ச்சிபெற்று பரு வருவதை கட்டுப்படுத்தும்.

தினமும் குளிக்க போவதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்யலாம்.தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை மசாஜ் செய்யலாம்.இயற்கையாகவே குளிர்ச்சி மிக்க உடம்பு உடையவர்கள் மெதுவாக சூடு படுத்தி ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம்.