வார இறுதி நாட்கள் ஊரடங்கு அறிவிப்பு – டெல்லி !

national news : வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு !
national news : வாரத்தில் இரண்டு நாட்கள் ஊரடங்கு !

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்தியாவில் மகாராஷ்டிரா,கர்நாடகா,டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பரவும் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுமுடக்கமும்,இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் அங்கு வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

உடற்பயிற்சி நிலையங்கள், ஆடிட்டோரியம் உள்ளிட்டவைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் அங்கு திரையரங்குகளில் 30% இருக்கைகள் மட்டுமே அனுமதி என்று அரசு அறிவித்துள்ளது.