ஆன்லைனில் அரியர் தேர்வுகள் நடத்தப்படும் – தமிழக அரசு !

கரோனா தொற்று காரணமாக அணைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

அரியர் தேர்வுகளை ரத்து செய்வதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்ததை எதிர்த்து வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு அரியர் மாணவர்களுக்கு மே 17ந்தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த ஆன்லைன் தேர்வை எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது என்றும் தெரிவித்துள்ளது. கரோனா தொற்றை இருக்கும் நிலையில் அரியர் தேர்வுகள் அனைத்தையும் அடுத்த 8 வாரத்திற்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.