யூடியூப் சேனல் தொடங்கிய காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சிக்கென்று தனி சேவை தொடங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இந்த நிலையில் ‘ஐ.என்.சி.’ டிவி எனப்படும் புதிய யூடியூப் சேனலை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.

தொடக்க விழாவின்போது இந்த யூடியூப் சேனலில் முதல் நிகழ்ச்சியாக சுதந்திர போராட்டத்தில் பத்திரிகையாளராக மகாத்மா காந்தி ஆற்றிய பணிகள் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பத்திரிகைகளில் காந்தி எழுதிய கட்டுரை தொகுப்புகள் காண்பிக்கப்பட்டன.

புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘பல்வேறு வகையான கருத்துக்கள் இந்த சேனலில் ஒளிபரப்பாகும். இந்த யூடியூப் சேனல் படிப்படியாக பிராந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்’ என்றார்.