வார இறுதி ஊரடங்கு அறிவிப்பு – புதுவை !

கரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது.இதை தடுக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.மகாராஷ்டிரா,டெல்லி ஆகிய நகரங்களில் ஊரடங்கை அறிவித்துள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரும் வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு என்று அறிவித்துள்ளார்.