இனி வீட்டிலே செய்யலாம் ரோஸ் வாட்டர் !

with fresh flowers on the table

சருமம் அழகாக இருக்க முறையான பராமரிப்பு தேவை.அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு ரோஸ் வாட்டர் முக்கியம்.தரமான ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் நிச்சயம் சருமத்துக்கு எவ்வித கேடும் ஏற்படாது.

இனி நாம் வீட்டிலே ரோஸ் வாட்டர் தயாரிக்கலாம்.இதற்கு தேவையான பொருட்கள் பிங்க் நிற ரோஜா இதழ்கள்,2 டம்ளர் தண்ணீர்.

ஒரு பாத்திரத்தில் பிங்க் நிற ரோஜா இதழ்களை நிரப்புங்கள் ஒரு கப் அளவிற்கு.அந்த பாத்திரத்தின் மத்தியில் ஒரு சிறிய கிண்ணத்தை வையுங்கள்.பிறகு அந்த பூக்கள் மீது 2 டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். அந்த பாத்திரத்தை மூடிவிட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள்.நீராவி வெயில் செல்லாத அளவிற்கு அந்த பாத்திரம் இருக்க வேண்டும்.

தண்ணீர் கொதித்த பின்பு நீராவி அந்த கிண்ணத்தில் விழும்.இதுதான் தூய்மையான ரோஸ் வாட்டர்.மேலும் அந்த பூக்களின் மேல் இருக்கும் ரோஸ் வாட்டர் குறைந்த நாள் தான் இருக்கும் இதையும் நாம் முகத்திற்கு பயன்படுத்தலாம்.