ஜூலை 4-ம் தேதி வரை 7 மாவட்டங்களில் கனமழை

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக ஜூலை 4-ம் தேதி வரை 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் .

அதில் தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும் அடுத்த 24 மணிநேரத்தில் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மேலும் ஜூலை 2ம் தேதி வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.