கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!!

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 25 அதிகரித்து ரூ.850.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் ரூ.84.50 விலை உயர்ந்து ரூ.1,687.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளள்ளது.

இப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் தொடர்ந்து விலை அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.