இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்

orange alert : 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

இந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஓரிரு வாரங்கள் பெய்த மழை அதன்பின்பு சற்று குறைந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவின் மலையோர மாவட்டங்களில் மீண்டும் மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி கடந்த சில நாட்களாக கேரளாவின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.