கொரோனா போனஸாக 1.12 லட்சம் வழங்கும் மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் அனைத்து ஊழியர்களுக்கும், கொரோனா போனஸாக 1.12 லட்சம் ரூபாயை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் துணைத் தலைவர் பதவிக்கு கீழே உள்ள ஊழியர்கள் அனைவருக்கும், இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, இந்த போனஸ் வழங்கப்படுகிறது.

நிரந்தர பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, பகுதி நேரமாக, மணிக் கணக்கின் அடிப்படையில் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்பட உள்ளது.

மேலும், இந்த போனஸ், அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி; உலகெங்கிலும் இருக்கும் மைக்ரோசாப்ட் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், மைக்ரோசாப்டின் துணை நிறுவனங்களின் ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், கிட்டத்தட்ட 1.75 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இந்நிறுவனம், 21 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.