பிரியா ரமணிக்கு குவியும் பாராட்டுக்கள் !

இந்திய வெளியுறவுத்துறை முன்னாள் இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் புகார் கூறி பிரியா ரமணிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பெண் உரிமை செயல்பாட்டாளர்களும் பெண் பத்திரிகையாளர்களும் வரவேற்றுள்ளனர்.

மேலும் மூத்த பத்திரிகையாளர் பர்கா தத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆமாம், பிரியா ரமணிக்கு எதிரான வழக்கில் அவர் வென்றுள்ளார். தங்களுக்கு நிகழும் கொடுமைக்கு எதிராக அமைதி காத்து வந்த பெண்கள் குரல் கொடுக்க இந்த தீர்ப்பு துணிச்சலைத் தரும் என்று பர்கா கூறியுள்ளார்.

அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் பெண்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.