பிக்பாஸ்கெட்டின் பங்குகளை வாங்கும் டாடா குழுமம் !

பிக்பாஸ்கெட் நிறுவனம் ஆன்லைன் மூலம் இந்தியாவில் முழுவதும் மளிகை பொருட்களை விநியோகித்து வரும் மிக பெரிய நிறுவனம்.தற்போது இந்த நிறுவனத்தின் 68 சதவிகித பங்குகளை வாங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் டாடா நிறுவனம் பிக்பாஸ்கெட்டில் சுமார் 9500 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது. இதன் மூலம் அலிபாபா மற்றும் அப்ராஜ் குழுமம் பிக்பாஸ்கெட்டிலிருந்து வெளியாகும் எனத் தெரிகிறது.

மேலும் பிக் பாஸ்கெட்டின் இணை நிறுவனர் ஹரி மேனன் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் நிறுவனத்துடன் தொடரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.