மேற்குவங்கத்தில் இன்று 6ஆம் கட்ட வாக்குப்பதிவு

மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலுக்கான 6ஆம் கட்ட வாக்குப்பதிவு, வரலாறு காணாத பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் வடக்கு 24 பர்கானாக்கள், நாடியா, கிழக்கு பர்தமான், உத்தர் தினாஜ்பூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த 43 தொகுதிகளில் இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதற்காக 14,480 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஊழியர்கள் அனைவரும் ஏற்கொனவே அனுப்பி வைக்கப்பட்டு தயாரிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன