தமிழகத்தில் கொரோனா நிலவரம்

சென்னையில் அதிகபட்சகமாக 3750 பேருக்கு செங்கல்பட்டில் 947 பேருக்கும் கோவையில் 715 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று.. உயிரிழப்பு 53
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7071 பேர் குணமடைந்துள்ள நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரேனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சகமாக 3750 பேருக்கு செங்கல்பட்டில் 947 பேருக்கும் கோவையில் 715 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரேனாாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது.