கரோனா வலையில் தமிழகம்…இன்றைய பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தை ஆட்டி படைத்து வருகிறது.நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், இன்று 11,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 3,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டுவில் 947 பேருக்கும், கோவையில் 715 பேருக்கும், திருவள்ளூரில் 529 பேருக்கும், மதுரையில் 462 பேருக்கும், சேலம் 401 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,258 ஆக உயர்ந்துள்ளது.