மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி – மகாராஷ்டிரா !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் வீசிக்கொண்டிருந்தது.இந்நிலையில்,பாதிப்பு எண்ணிக்கை அதிகம் இருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா,டெல்லி மற்றும் தமிழகம் ஆகியவையாகும்.

இன்று மகாராஷ்டிரா மாநில் நாசிக்கில் உள்ள ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராதவிதமாக வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.