தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது.இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்த போது கூறியது,தமிழகத்தில் 6 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரத்தி 512 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 95 ஆயிரத்து 40 பேர் எனவும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 40 ஆயிரத்து 880 பேர் எனவும் தெரிவித்தார்.
மேலும், தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 7 மணி வரை நடைபெறும் எனவும் சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் மக்கள் கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றிமாக அறிவிக்கப்பட்டுள்ளது.