இன்று தமிழகம் வருகிறார் சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து பெங்களூருவில் தங்கியிருக்கும் சசிகலா இன்று காலை சென்னை திரும்புகிறார். தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுக 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

கர்நாடகா – தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்கிறார்கள். இது தொடர்பாக தமிழகம் திரும்பும் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று ஒரு சில கட்டுப்பாடுகளை கிருஷ்ணகிரி காவல்துறை விதித்துள்ளது.

ட்டாசு வெடிப்பதற்கும், பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கும் கட்டாயம் அனுமதியில்லை. பேனர்கள் மற்றும் தோரணங்கள் அனுமதியின்றி வைக்க கூடாது. இந்த விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.