சசிகலா நாளை சென்னை வருகை ..வரவேற்புக்கு போலீஸ் அனுமதி !

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்து விடுதலையாகி பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்னை காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவில் இருந்து சென்னை வரும்போது பெரிய அளவில் வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு செய்துவருவதால் சசிகலாவின் வருகை பெரும் கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க இருப்பதாக உள்ளது.சசிகலா சென்னை வந்த பிறகு அதிமுக பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.