சசிகலா வருகை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது !

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அம்மா மினி கிளினிக்கை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,சசிகலா வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு அவர்,கொசு, ஈக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது. சசிகலா வருகையால் எங்களுக்கு எந்த பதற்றமும் இல்லை என்று பதிலளித்தார்.

மேலும் சசிகலா சிறையில் இருந்தபோது டிடிவி அவரது சொத்துக்களை கொள்ளை அடித்து விட்டார் தற்போது அவர் பதற்றத்தில் இருக்கிறார்.மேலும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்கள் அதிமுகவில் இடமில்லை.

மேலும் ஓபிஎஸ் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு , ஓபிஎஸ் நூறு சதவீதம் எங்களோடு தான் கடைசிவரை இருப்பார் என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையுடன் உள்ளோம் என்று கூறினார்.