நடிகை சன்னி லியோன் மீது மோசடி புகார் !

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் கொச்சியில் உள்ள துணிக் கடை திறப்பு விழாவுக்கு வருவதாக கூறி ரூ 29 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக கேரளாவில் சுற்றுலா செய்து வரும் நடிகை சன்னி லியோனிடம் நேற்று கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தையும் பெற்றுள்ளனர்.

அவர் கூறியது , கரோனா தொற்று காரணமாக சொன்ன தேதியை தாண்டி 5 முறை நிகழ்ச்சியை அவர்கள் மாற்றி அமைத்ததாலும் தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.