அரசுடைமையாக்கப்படும் இளவரசி சொத்துக்கள்..!

சசிகலாவின் உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துக்களை அரசுடைமையாக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

இதில், சென்னை வாலஸ் தோட்டத்தில் உள்ள 5 மனைகள் மற்றும் கூடுதல் சொத்துக்கள் அடங்கும். இதேபோல், சென்னை ஸ்ரீராம் நகர் டிடிகே சாலையில் உள்ள ஆயிரத்து 237 சதுரஅடி பரப்பளவில் உள்ள அடுக்குமாடி வீடும் அரசுக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்கள் மூலம் பெறப்படும் வாடகை மற்றும் இதர வருவாய் தமிழக அரசுக்கு சொந்தம் என்றும் சென்னை ஆட்சியர் சீத்தாலட்சுமி அறிவித்துள்ளார்.