சித்ரா தற்கொலை: ஹேமந்த் பேசிய ஆடியோவால் மீண்டும் சர்ச்சை

சித்ரா தற்கொலையில் நாளுக்கு நாள் பல தகவல் வெளியாகின்றன. இந்நிலையில், சித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட அன்று நண்பர் ஒருவருடன் ஹேமந்த் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், ஆமா செல்லக்குட்டி பிரமிஸ் பண்ண மாதிரி இன்னைக்கு அவன் கூட ஃபேர் டான்ஸ் எல்லாம் ஆடல இல்ல அப்படின்னு கேட்டேன். அப்போ அவ ஆடினேன்னு சொன்னால், எனக்கு கண்ணே லங்கிடுச்சி. ஏண்டி! இப்படி பண்றன்னு சொன்னேன். வெளிய தம் அடிக்க போனேன் வந்தேன், ஏதோ ஒரு மாதிரியே உட்கார்ந்துக்கிட்டு இருக்கா?. வெளிய புல்வெளி மாதிரி இருக்கும் அங்க உட்கார்ந்து கூப்பிட்டேன்…வா சித்துன்னு… இதோ வர்றேன்னு சொன்னவள் டக்குன்னு கதவை மூடிட்டால். திறக்கவே இல்ல. ஜன்னலை தட்டிப்பார்த்தும் திறக்கல.

அப்புறம் போய் ரூம் சாவி வாங்கிட்டு வந்து திறந்து பார்த்தால் என் கண்ணு முன்னாடி தொங்குறாடா? என பேசியிருப்பது பதிவாகியுள்ளது. இதன் மூலம் சித்ரா வேறு ஒரு ஒரு நடிகருடன் நடனமாடியதால் ஹேமந்துடன் பிரச்சனையானது தெரியவந்துள்ளது.