40 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

கடந்த டிசம்பர் 14-ம் தேதியன்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 7 மீனவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 4 மீனவர்கள் என மொத்தம் 40 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இன்று அனைவரும் தாயகம் திரும்பினர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை கொழும்பு விமான நிலையத்திலுருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

தொடர்ந்து மீனவர்கள் 40 பேரும் அவரவர் மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.