மருத்துவ சேவைக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் டாக்டர் வி. சாந்தா..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தும் பணியை ஒரு தவமாய் நினைத்து பணியாற்றி வந்த டாக்டர் வி. சாந்தாவின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வயது 93.

அடையாறு மருத்துவமனையை உலகத் தரம்வாய்ந்த, புகழ் பெற்ற புற்றுநோய் சிகிச்சை மையமாக மாற்றுவதில் இவரது பங்கு அளப்பறியது. உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த இவர், புற்றுநோய் தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.