ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணி வீரர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டதால், என்னால் அதிரடியாக விளையாட முடிந்தது” எனத் தெரிவித்தார்.
விராட் கோலி கடைசியாக பங்கேற்ற மூன்று போட்டிகளில் 14, 1, 3 என மோசமான ரன்களை பதிவு செய்திருந்தார். இதனால், கடும் விமர்சனங்களுக்கு ஆளான அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 53 பந்துகளில் 72 ரன்கள் குவித்து தன்னுடைய திறமையை நிரூபித்துள்ளார்.