சுங்கச் சாவடியில் வன்முறையில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் !

சென்னை மதுரவாயல் – தாம்பரம் புறவழி சாலையில் போரூர் அருகே இயங்கிவரும் சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டனர்.கார் மற்றும் ஆட்டோவில் வந்த கும்பல் சிறிது நேரத்திற்குள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிவிட்டனர்.இந்த கட்சி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 19 ஆம் தேதி கால்டாக்சி ஓட்டுநர் மண்ணிவாக்கம் பாபு மற்றும் சுங்கச்சாவடி ஊழியர் இருவருக்கும் கட்டணம் செலுத்துவது குறித்து தகராறு ஏற்பட்டுள்ளது.மேலும் போலீஸார் கேமராவில் பதிவாகிய ஆதாரத்தை கொண்டு தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.