முதல்வன் திரைப்படத்தில் வருவது போல் ஒரு நாள் முதல்வர் !

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு , உத்தரகண்டில் கல்லூரி மாணவியான பெண் ஷிருஷ்டி கோஸ்வாமி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.ஹரித்வார் மாவட்டத்தின் தவுலத்பூர் கிராமத்தில் வசிக்கும் ஷிருஷ்டி கோஸ்வாமி B.Sc Agri படித்து வருகிறார்.

இன்று நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது.இவர் அந்த மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான கெயிர்செயின் பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஒரு நாள் முதல்வராக பணியாற்றுவார்.

அவர் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இவர் உத்தரகண்ட் மாநிலத்தின் சிறுவர்களுக்கான சட்டசபையில் முதல்வராக இருந்து வருகிறார்.