ராகுல் காந்தி தமிழக தேர்தல் பரப்புரையால் மாற்றம் நடைபெறாது !

ராகுல் காந்தி வர இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகிறார்.இந்த வருடம் நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண நேரில் வந்தார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.

தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மூன்று நாட்களுக்கு பரப்புரை மேற்கொள்கிறார். ராகுல் காந்தியின் பரப்புரை, தமிழக தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்திருக்கிறது.

மேலும்,தமிழக பாஜக தலைவர் முருகன் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.பிரதமர் மோடியை விமர்சித்து பேச ராகுல்காந்திக்கு எந்த தகுதியும் இல்லை என பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.