விஜய் சேதுபதி படப்பிடிப்பு தளத்தில் கரோனா கால விதிகளை பின்பற்றவில்லை !

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் படப்பிடிப்பு பழனியில் காரமடை தோட்டம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.இதை அறிந்த அவரது ரசிகர்கள் விஜய்சேதுபதியை காண மண்டபம் முன்பு குவிந்தனர்.

இந்த கரோனா பரவல் காலகட்டத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று அரசு கூறுகிறது.மேலும் படப்பிடிப்பில் பணிபுரியும் நடிகர் மற்றும் ஊழியர்கள் சமூக இடைவேளை பின்பற்றவில்லை, முகக்கவசம் அணிய வில்லை எனவும் சுகாதாரத்துறை தகவல் கிடைத்தது.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெயந்தி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார்.இதனால் அந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.